சென்னை வேலம்மாள் மையப்பள்ளி வளாகத்தில் 10 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் சுமார் 4000 மாணவர்கள் கலந்து கொண்டனர். சென்னை மாநகராட்சியுடன் இணைந்து வேலம்மாள் பிரதான வளாகம் இந்த தடுப்பூசி முகாமை ஏற்பாடு செய்தது.
வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் வருகை தந்திருந்து ஏற்பாடு செய்த இந்தத் தடுப்பூசி இயக்கத்தை அம்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ஜோசப் சாமுவேல் தொடங்கி வைத்தார்.
தொற்றுநோய்கள் மிகுந்த இந்தக் காலகட்டத்தின் போது இதுபோன்ற தடுப்பூசி முகாமை நடத்திய நிர்வாகத்திற்குப் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
அம்பத்தூர் மாவட்ட சுகாதார அலுவலர் ஷீலா தலைமை வகித்தார். சுகாதார அதிகாரிகள் மன்சூர் மற்றும் சஹானா இத்தடுப்பூசி முகாமில் உடனிருந்தனர்.