வி.எல்.பி கல்லூரியில் தேசிய வாக்காளர் தின கொண்டாட்டம்

கோவை, வி.எல்.பி ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 12வது தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வு புதிய வாக்காளர்களை ஊக்குவிப்பதற்கும் அதிகப்படுத்துவதற்கும், எளிதாக்குவதற்கும் நோக்கமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அனைத்து அம்சங்களிலும் நெறிமுறைகளைப் பின்பற்றுமாறு மாணவர்களை வலியுறுத்தினார். தொடர்ந்து துணை முதல்வர் வாசுதேவன் தனது உரையினை வழங்கினார். இந்நிகழ்வில் மாணவர்களுக்குப் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.