ஆர்.வி.கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர்.ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியும், கோவை யெங் ஸ்டார்ஸ் மையமும் இணைந்து வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்பிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது.

இந்நிகழ்வில் கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் ராமகிருஷ்ணன் தலைமை ஏற்றார். கல்லூரி முதல்வர் ரூபா மற்றும் நிர்வாக மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கோவை யெங் ஸ்டார்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜசேகர் மற்றும் பிந்து ராஜசேகர் பங்கேற்று அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்ச்சியில் கணினி அறிவியல் துறைத்தலைவர் சண்முகப்பிரியா, ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா பங்கேற்றனர்.