ஸ்ரீ அண்ணபூர்ணா உடன் எஸ்.என்.எஸ் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, சரவணம்பட்டியில் அமைந்துள்ள எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் வேளாண்மை பொறியியல் துறை, உணவு தொழில்நுட்ப துறை மற்றும் கோவையில் தனித்தன்மையும், புகழ்மிக்க உணவு நிறுவனமுமாகிய ஸ்ரீ அண்ணபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் குழுமத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஸ்ரீ அண்ணபூர்ணா ஸ்ரீ கெளரிசங்கர் குழுமத்தின் பொது மேலாளர் ரங்கநாதன், எஸ்.என்.எஸ் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர், செந்தூர் பாண்டியன் ஒப்புதலின் பேரில் வேளாண்மை பொறியியல் துறை, உணவு தொழில்நுட்ப துறையின் தலைவி வேலுமணியிடம் ஒப்பந்தம் வழங்கப்பட்டது.

உணவு தொழில் சார்ந்த பயிற்சி, உணவுத்தரம் மற்றும் பகுப்பாய்வு தொடர்பான தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் பயிற்சிகள் வழங்க இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.