பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வலியுறுத்தி வாகன நிறுத்த போராட்டம்

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலையை குறைக்க வலியுறுத்தி. சி.ஐ.டி.யு சார்பில் கோவையில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது.

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று சிஐடியு தொழிற்சங்கத்தினர் கோவையில் உள்ள காந்திபுரம், சிங்காநல்லூர், ஹோப்ஸ் உள்ளிட்ட வெவ்வேறு சிக்னல்களில் 10 நிமிடங்கள் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடத்தினர்.

மேலும், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.