உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு கிணத்துக்கடவு பேருந்து நிலையத்தில் கற்பகம் மருத்துவமனை மற்றும் கற்பகம் செவிலியர் கல்லூரி இணைந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவ்விழாவில் கற்பகம் மருத்துவமனை மருத்துவர் நவீன்பிரபு, கலந்துகொண்டு எய்ட்ஸ் தடுப்புமுறைகளை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் செந்தில்குமரன் மற்றும் அருள்ப்ரகாஷ் கலந்துகொண்டு மகளிர் பாதுகாப்பு தகவல் தொடர்பினை பற்றி எடுத்துரைத்தார்.
இவ்விழா கற்பகம் செவிலியர் கல்லூரியின் முதல்வர் சுதா வழிகாட்டுதலின்படி இனிதே நடைபெற்றது. இவ்விழாவில் மாணவிகள் எய்ட்ஸ் தொற்று உள்ளோரும் நம்மில் ஒருவரே என்பதை மனதில் கொண்டு அவர்களையும் மனித நேயத்துடன் அரவணைத்து ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உரையாற்றினார்கள்.
இவ்விழாவில் முடிவில் பொதுமக்கள் கையொப்பம்மிட்டு தங்களது எதிர்மறை கருத்துக்களை களைந்தெறிந்தனர்.