கோவையில் பேங்க் ஆஃப் பரோடா-வின் கடன் கண்காட்சி

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆஃப் பரோடா வங்கி, இந்த விழாக்காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன் மற்றும் கார் கடன் ஆகியவற்றை வழங்குகிறது. இதற்காக பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் கோவை பிராந்தியம் ஆனது வி.ஜி.ஈவன்ட் மேனேஜ்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து வீடு மற்றும் கார் கடன் கண்காட்சியினை நாளை மற்றும் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் நடத்துகிறது. இக்கண்காட்சியினை பார்வையிடுவதற்கான அனுமதி இலவசம்.

தடையில்லாத வங்கிக் கடன் சேவையின் வாயிலாக கோவை மக்கள் மிகச் சுலபமாக முன்னணி கட்டுமான நிறுவனங்களிடம் இருந்து வீடு வாங்கவும் / வீடு கட்டவும் மற்றும் முன்னணி கார் டீலர்களிடம் இருந்து கார்களை வாங்கவும் வசதிகளை ஏற்படுத்துக் கொடுத்து அவர்களிள் கனவுகளை நிஜமாக்குவதே இந்த கண்காட்சியின் நோக்கமாகும். இக்கண்காட்சிக்கு வருவதன் மூலம் இடைத்தரகர்கள் இல்லாமல் விற்பனையாளர்களை நேரடியாக சந்தித்து பொதுமக்கள் தாங்கள் விரும்பும் சொத்துக்களை வாங்க முடியும். இங்கு வாங்குவதற்கு தயார் நிலையில் பல்வேறு விலைகளில் உள்ள சொத்துக்களை வாடிக்கையாளர்கள் பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் பல்வேறு வீடு மற்றும் கார் கடன் திட்டங்களின் வசதியுடன் வாங்கி மகிழ முடியும்.

கண்காட்சி சிறப்பு சலுகையாக வீடு மற்றும் கார் கடன் வாங்குபவர்களுக்கு பேங்க் ஆஃப் பரோடா வங்கி சார்பில் வட்டி விகிதம் மற்றும் பரிசீலனைக் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது. தேவையான ஆவணங்களுடன் கண்காட்சிக்கு வருபவர்களுக்கு வங்கி சார்பில் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டு உடனடி கடன் ஒப்புதலும் அளிக்கப்படுகிறது.

இக்கண்காட்சியில் புது வீடு வாங்குவதற்கும், கட்டுவதற்கும் மற்றும் கார் வாங்குவதற்கும் எளிதாக கடன் பெறலாம். மேலும் இந்த கண்காட்சியில் கட்டுமானத் துறையில் முன்னணியில் திகழும் நிறுவனத்தினர் மற்றும் கார் முகவர்கள் இடம் பெறுகிறார்கள். எனவே மிகவும் குறைந்த விலையில் வீடு, அடுக்குமாடி குடியிருப்புகள், காலி இடங்களை குறைந்த விலையிலும், விரும்பும் இடத்திலும் தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு ஏற்ப அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனி வீடுகள் இக்கண்காட்சியில் இடம் பெறுகின்றன. இவை அனைத்தையும் கட்டுமானத் துறையில் நீண்ட கால அனுபவம் வாய்ந்த சிறந்த நிறுவனங்களிடம் இருந்து பொது மக்கள் வாங்கி பயனடையலாம்.

மேலும் எண்ணற்ற நவீன மாடல் கார்களை தேர்வு செய்து, அவற்றின் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை ஆராய்ந்து பார்த்து வாங்க ஏதுவாக பல்வேறு முன்னணி கார் முகவர்களின் அரங்குகள் இடம் பெற உள்ளன.