எல்.ஆர்.டி நிறுவனம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

ஆண்டுதோறும் எல்.ஆர்.டி நிறுவனத்தாரால் செல்லப்பம் பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக பணமும் சான்றிதழும் வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டிற்கும் வழங்கப்பட்டது.

இந்த நிறுவனம் பல்வேறு வகையில் பள்ளியின் வளர்ச்சிக்கான அடிப்படை கட்டமைப்பிற்கு மிகவும் உதவிகரமாக இருந்திருக்கின்றது.

மாணவர்களின் கற்றலுக்காக கணினிகள் மற்றும் கணினி பயிற்றுநரும் தந்து மாணவர்களிடையே கணினி கையாளும் திறனை அறிய உதவுகிறது.

மேலும் குடிநீர் தொட்டி, உணவு, சமையல் போன்ற பல்வேறு பணிகளையும் இந்நிறுவனம் பள்ளிக்கு செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு மாணவர்கள் சார்பில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.