கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு

தமிழகம் மற்றும் கர்நாடகாவில் பெய்துவரும் கனமழை காரணமாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து மேலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு மேலும் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 10,000 கன அடியிலிருந்து 14,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில், மேட்டூர் அணையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி, அணையின் நீர்மட்டம் 112.28 அடியாகவுள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல சாலைகள் மற்றும் தெருக்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது இந்த நிலையில் பல தெருக்கள் மற்றும் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருக்கின்றது. தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.