ரோட்டரி கிளப் புதிய உறுப்பினர்கள் அறிமுக விழா

கோவை ரோட்டரி கிளப் வடவள்ளி சார்பாக கடந்த 7 ஆண்டுகளாக மருத்துவம், மரங்கள் நடுவது, பசிப்பிணி போக்குவது என பல்வேறு சமுதாய நலப்பணிகளை செய்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக புதிதாக 20 உறுப்பினர்கள் அறிமுக விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்ட பிறந்த குழந்தைக்கு ஒரு வருட சிகிச்சைக்காக 36 ஆயிரம் ரூபாய் வழங்கி ரோட்டரி சரவணன் உதவி செய்தார். இதில் சிறப்பு விருந்தினராக
மாவட்ட ரோட்டரி ஆளுநர் ராஜசேகர் மற்றும் துணை ஆளுநர் பாஸ்கரன் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சியில் ரோட்டரி கிளப் கோவை வடவள்ளி தலைவர் ஜான் சிங்கராயர், செயலாளர் பிராங்கிளின் ஜெய்சன், நிறுவன தலைவர் மாணிக்கவாசகம் மற்றும் நிர்வாகிகள் இளங்கோ, ராஜன் ஆறுமுகம், விஜயசேகர், பாஸ்கரன், குமரேசன் தியாகராஜன், தங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.