கற்பகம் பல்கலையில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

கோகுலாஷ்டமியை முன்னிட்டு கற்பகம் பல்கலைக்கழகத்தின் நுண்கலை மன்றத்தின் சார்பாக சிறப்பு விழா ஏற்பாடு செய்யப்பட்டு (28.08.21)கொண்டாடப்பட்டது. விழாவில் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லா பணியாளர்கள் கலந்து கொண்டனர். குழந்தைகள் கண்ணன் இராதைப் போல உடையணிந்து பாடல்களுக்கு நடனமாடினர்.

விழாவினை நுண்கலை மன்றப் பொறுப்பாளர் குழந்தைவேலு தொகுத்தளிக்க பல்கலைக்கழக பதிவாளர் பழனிசாமி மற்றும் துணைவேந்தர் சேது சுடலைமுத்து ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர்.