சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற என்.ஜி.பி கல்லூரி மாணவர்கள்

அம்ர்ஸ்டார் பஞ்சாப்பில் நடைபெற்ற நான்காவது தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியைச் சேர்ந்த மாணவர்கள் ஸ்ரீ முத்துகிருஷ்ணா மற்றும் சுதர்சன் இருவரும் கலந்து கொண்டு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளனர்.

ஸ்ரீ முத்துகிருஷ்ணா மற்றும் சுதர்சன் இருவரும் மதுரையில் உள்ள நேதாஜி விளையாட்டு வளர்ச்சி மற்றும் அறகட்டளை (NSDF) மூலமாக மதுரை கிரிக்கெட் அணியின் சார்பாக பல மாவட்ட மற்றும் மாநில வாரியான கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ்நாடு இளைஞர் விளையாட்டு வாரியம் மூலமாக திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில அளவிலான சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் மதுரை அணியின் சார்பாக கலந்து கொண்டனர்.

சமீபத்தில் இளைஞர் ஆசிய விளையாட்டு கூட்டமைப்பு (YAGP) சார்பாக நடைபெற்ற நான்காவது தேசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டியில் இக்கல்லூரியை சேர்ந்த இவ்விரு மாணவர்களும் கலந்து கொண்ட அணி, பஞ்சாப் மற்றும் கர்நாடக அணியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றனர். இறுதிபோட்டியில் பாண்டிச்சேரி அணியுடன் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

பதக்கம் வென்ற மாணவர்கள் இருவரையும் கோவை மருத்துவ மைய மருத்துவமனையின் தலைவர், மருத்துவர் நல்ல பழனிசாமி, செயலாளர் மருத்துவர் தவமணி பழனிசாமி மற்றும் கோவை மருத்துவ மைய ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்டளையின் முதன்மை செயல் அலுவலர் புவனேஸ்வரன், டாக்டர் என்.ஜி.பி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் முதல்வர் பிரபா, துறைதலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோர் வாழ்த்துத் தெரிவித்தனர்.