நாட்டின் 75வது சுகந்திர தினத்தையொட்டி கே.பி.ஆர்.பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் முனைவர் கே.ஆனந்த்(IFS) வனப் பாதுகாவலர், மத்திய அகாடமியின் மாநில வனத்துறை அதிகாரி, கோயம்புத்தூர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார்.
முதல்வர் முனைவர் மு.அகிலா அவர்கள் வரவேற்ப்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் கே.பி. ராமசாமி அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்நிகழ்வின் கல்லூரியின் தேசிய மாணவர் படைப்பிரிவு அதிகாரி லெட்டினன்ட் முனைவர்.ஏ.கே.பிரியா,
துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் 75வது சுகந்திர தினத்தை நினைவு கூறும் வகையில் கல்லூரி வளாகத்தில சிறப்பு விருந்தினர் மற்றும் கல்லூரியின் முதல்வர் அவர்கள் மரகன்றுகளை நட்டனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் தேசிய மாணவர் படை அணிவகுப்பு நடைபெற்றது.