ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் அப்துல் கலாம் நினைவு தினம் அனுசரிப்பு

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் பி.எல். சிவக்குமார் அவர்கள் ஏவுகணை நாயகன் டாக்டர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்அவர்களின் நினைவு தினத்தை சிறப்பிக்கும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில் கல்லூரியின் துணை முதல்வர், முதன்மையர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். கல்லூரியின் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் பேரா. பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் ஆகியோர் இந்நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தனர்.