ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும் நலத்திட்ட உதவிகள்

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினரும் ஆன திருநாவுக்கரசர் பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை மற்றும்  ஆதரவற்றோர்களுக்கு உணவு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர். தற்போது திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இவரது பிறந்த நாள் விழாவை,கோவையில் ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியின்  மாநில பொது குழு உறுப்பினரான ஓ.பி. உமாபதி கொண்டாடி வருகிறார்.

இந்நிலையில் இந்த ஆண்டு திருநாவுக்கரசர் பிறந்த தினத்தை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கோவை காந்திபார்க் பகுதியில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில பொது குழு உறுப்பினர் ஓ.பி. உமாபதி தலைமையில் நடைபெற்ற இதில், சிறப்பு அழைப்பாளராக செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கலந்து கொண்டார்.இதில் கொரோனாவால் வருமானம் இன்றி தவிக்கும் ஏழை தொழிலாளர் குடும்ப மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

தொடர்ந்து ஆதரவற்றோர்களுக்கு மதிய உணவு, வாட்டர் பாட்டில் ஆகியவை வழங்கப்பட்டது. முன்னதாக அருகில் உள்ள முருகன் கோவிலில் பிறந்த நாள் கொண்டாடும் திருநாவுக்கரசர் பெயரில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை தலைவர்கள்  குருசாமி, ராமநாகராஜ், சர்க்கள் தலைவர் ஜேம்ஸ், மற்றும் வி்.ஜி.பி.நடராஜ், முருகன், சிம்மம் நாகராஜ், ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.