குர்பானி நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் – இந்து முன்னணி கோரிக்கை

பொது இடங்களில் குர்பானி நிகழ்ச்சி நடத்த தடை செய்யக்கோரி இந்து முன்னணியினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (05.07.2021) மனு அளித்தனர்.

இந்து முன்னணியினர் அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: கோவை போன்ற பெருநகரில் பல இடங்களில் ஆடு மாடுகளை பொது இடத்தில் வெட்டுவது அதிகரித்து வருகிறது. விலங்கினங்களை துன்புறுத்துவதற்கே பல கட்டுப்பாடுகள் இருக்கின்ற போது மக்கள் அதிகமாக பயணம் செய்யும் செல்வபுரம் ஆத்துப்பாலம் போத்தனூர் போன்ற பகுதிகளில் குர்பானி கொடுக்கும் நிகழ்ச்சியை சிலர் நடத்துகின்றனர்.

இது சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துவதுடன் பொதுமக்களை முகம் சுழிக்க வைக்கிறது. கொரோனா நோய் பரவிவரும் இந்த நேரத்தில் இது போன்று பொது இடத்தில் இறைச்சிகள் வெட்டப்படுவது நோயை அதிகரிக்கும். இறைச்சியை வெட்டுவதற்கென்றெ இறைச்சி கூடம் என்ற இடம் உள்ளது . எனவே அந்த இடங்களிலே அதை வெட்ட வேண்டும் .

எனவே குர்பாணி போன்ற நிகழ்ச்சிக்கும் பொது இடத்தில் ஆடு மாடுகள் ஒட்டகம் வெட்டப்படுவதையும் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் தடைவிதிக்க வேண்டுமென்று மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.