39 மனைவிகள், 94 குழந்தைகள் கொண்ட உலகின் மிகப்பெரிய குடும்ப தலைவர் மரணம்

மிசோரம் மாநிலத்தின் பங்தங் டிலாங்னுயம் என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் ஜியோனா சனா. இவருக்கு வயது 76. இவருக்கு 39 மனைவிகள், 94 குழந்தைகள் மற்றும் 33 பேரன், பேத்திகள் உள்ளனர். உலகிலேயே மிகப்பெரிய குடும்பத் தலைவரான இவருக்கு நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்னைகள் இருந்தன. உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதனால், இவரது குடும்பத்தினர் பெரும் சோகத்தில் உள்ளனர். இவரது மரணத்துக்கு மிசோரம் முதல்வர் சோரம்தங்கா மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் லால்தன்வாலா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.