தனிமைப்படுத்தப்பட்ட குடும்பத்திற்கு உதவிய ‘பாரத மாதா’

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட உடையாம்பாளையம் காமராஜர் காலனி பகுதியைச் சார்ந்த தாமேதாரன் அவர்களின் குடும்பங்களுக்கு மளிகைப்பொருட்கள், காய்கறிகள், கபசுரகுடிநீர் கிட், கொரோனா காலம் முடியும் வரை மதிய உணவு, கைசெலவிற்கு நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இதில் கெளரி சங்கர், கார்த்திக், சபரி, இளங்கோ, சுரேஷ், ராஜேஷ், பிரவின் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.