ஏழை மக்களுக்கு உணவு வழங்கும் கவுண்டம்பாளையம் திமுகவினர்

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் ஊரடங்கு காலத்தில் உணவின்றி இருப்போருக்கு, திமுக சார்பில் தொண்டர்கள், நிர்வாகிகள் உணவளிக்க வேண்டும் என அறியுறுத்தியிருந்தார். அதன்படி கவுண்டம்பாளையம் ஐந்தாவது வட்டத்தில், அப்பகுதியின் திமுக செயலாளர் நாகாமுரளி பிரகாஷ் தலைமையில் ஊரடங்கு முடியும் வரை தினமும் ஏழை எளிய மக்கள் 2000 நபர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

இந்நிலையில் அசோக் நகர் கீழ்ப்பகுதியில் ஏழாவது வட்டத்தின் அவைத்தலைவர் துரைபாண்டி அவர்கள் உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். அசோக் நகர் பள்ளி வாசல் அருகில் ஸ்ரீதர் அன்னக்கொடி கார்த்திகேயன் அஷ்ரப் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.

கவுண்டம்பாளையம் அசோக் நகர் மேல்பகுதியில், அப்துல்லா சுந்தரம் சுரேஷ் ஜோதி தலைமையில் உணவு வழங்கப்பட்டது. காமாட்சி அம்மன் கோவில் அருகில் வெங்கடேஷ் ஜேபி கண்ணன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது. காமராஜ் நகர் பகுதியில் கதிரவன் தலைமையில் உணவு வழங்கப்பட்டது.