ஆயிரம் பேருக்கு பிரியாணி வழங்கிய திமுகவினர்

முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை சாய்பாபாகாலனி பகுதி தூய்மை பணியாளர்கள் உட்பட ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணி மற்றும் லட்டுகளை தி.மு.க.வினர் வழங்கினர்.

ஊரடங்கு துவங்கியது முதலே தொடர்ந்து மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஏழை தொழிலாளர்கள், ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் காலனி வினோத் ஆனந்த் மற்றும் தொண்டரணி துணை அமைப்பாளர் தளபதி மோசஸ் ஆகியோர் உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 98 வது பிறந்த நாளை முன்னிட்டு சுமார் ஆயிரம் பேருக்கு சிக்கன் பிரியாணியுடன் லட்டு வழங்கும் நிகழ்ச்சி ராமலிங்கம் காலனியில் உள்ள மாநகராட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக சகல ஆன்மாக்கள் ஆலய ஆயர் சார்லஸ் சாம்ராஜ் கலந்து கொண்டார்.

முன்னதாக அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் உருவ படத்திற்கு அனைவரும் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது.