கோவை மேற்கு மண்டல புதிய ஐ.ஜி.யாக சுதாகர் நியமனம்

கோவை மேற்கு மண்டலத்தின் புதிய போலீஸ் ஐ.ஜி – யாக ஆர்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.யாக பணிபுரிந்தவர் அமல்ராஜ், கூடுதல் டி.ஜி.பி – யாக பதவி உயர்வு பெற்று சென்னைக்கு சென்றுள்ளார். அவருக்கு பதிலாக மேற்கு மண்டல புதிய போலீஸ் ஐ.ஜி – யாக ஆர்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இதற்கு முன் மதுரை சரக டி.ஐ. ஜி ஆக பணிபுரிந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளார், இதேபோல கோவை சரக டி.ஐ.ஜி பணிபுரிந்த நரேந்திரன் நாயர் மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி – யாக பணிபுரிந்த முத்துசாமி நியமிக்கபட்டுள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மேலும் பல ஐ.பி.எஸ் – கள் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.