கே.ஐ.டி தொழில் நுட்பக் கல்லூரி சார்பாக ரூ.25 லட்சம் நிவாரண நிதி

கோவை மாவட்டம் கண்ணம்பாளையத்தில் உள்ள கே.ஐ.டி- கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் நிறுவனத்தலைவர் மற்றும் முன்னாள் அமைச்சர் தி.மு.க கழக சொத்து பாதுகாப்புக்குழு துணைத் தலைவர் பொங்கலூர்.நா.பழனிச்சாமி அவர்கள், தமிழக அரசு அறிவித்த கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூபாய் 25 லட்சத்துக்கான காசோலையை தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (14-05-2021) சந்தித்து  பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.