ஓடிடி-யில் வெளியாகும் நிழல்

நயன்தாரா நடித்த திரில்லர் படமான நிழல் , கடந்த மாதம் 9-ந் தேதி திரை அரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால், இரண்டே வாரங்களில் தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது.

இப்படத்தை ஓடிடி-யில் வெளியிட முடிவு செய்துள்ள படக்குழு, தற்போது அதன் வெளியீட்டு தேதியையும் அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மே 11-ந் தேதி ‘நிழல்’ படம் ஓடிடி-யில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, நல்ல திரைக்கதைகள் அமையும் போது, மலையாளத்திலும் படங்கள் நடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த மாதம் வெளியான படம் நிழல், பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இப்படத்தை இயக்கி இருந்தார். இதில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்திருந்தார்.