மீண்டும் அண்ணா பல்கலைக்கழக பருவத் தேர்வு

அண்ணா பல்கலைக்கழகத்தின் நவம்பர் / டிசம்பர் 2020ம் ஆண்டு நடைபெற்ற பருவத் தேர்வில் பல முறைகேடுகள் நடந்ததை கருத்தில் கொண்டு மீண்டும் தேர்வுகள் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மீண்டும் நடைபெறும் இத்தேர்வுக்கு மாணவர்கள் தேர்வு கட்டணம் கட்ட வேண்டியதில்லை என்றும், பிப்ரவரியில் நடைபெற்ற தேர்வில் வெற்றிப் பெற்ற மாணாக்கர்கள் விரும்பினால் இந்த தேர்வினை எழுதலாம் என்றும், தேர்வு 3 மணி நேரம் இணையவழி தேர்வாக (Online Examination) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பல்கலைக்கழகம் கொரோனாவிற்கு முன்பு பின்பற்றிய வினாத்தாள் முறையே கடைபிடிக்கப்படும். பிற பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கான தேர்வுகள் மே 25ம் தேதி முதல் நடத்தப்படும். தேர்வுகள் குறித்து அந்தந்த பல்கலைக்கழகங்களே அறிவிப்பு வெளியிடும் தெரிவிக்கப்பட்டுள்ளது.