100 நாள் வேலை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ள 4842 கர்நாடக பட்டதாரிகள்!

கொரோனா ஒரு நோயாக மனிதர்களை மட்டுமல்லால், அவர்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கியுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் வேலையின்மை பலரையும் தாக்கி கொண்டிருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் பலரும் பல விதமான இக்கட்டான சூழலில் சிக்கிக்கொண்டு தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்நாடகா, ஹாவேரி மாவட்டத்தில் இளங்கலை முதல் பிஹெச்டி வரை படித்துள்ள 4842 பட்டதாரிகள் 100 நாள் வேலை திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்த திட்டம் வேலையில்லாத ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்டது.

இந்த பணிக்கு படித்த பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளது, வேலையின்மையின் தாக்கம் எந்தளவு உள்ளது என்பதை விளக்கும் விதமாக உள்ளது.