கே.பி.ஆர் கல்லூரியில் வேலைவாய்ப்பு நாள்

கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்ற மாணவர்களை பாராட்டும் வகையில் வேலைவாய்ப்பு நாள் இன்று (28.3.2021) கொண்டாடப்பட்டது.

கல்லூரியின் முதல்வர் அகிலா தலைமையில் முதன்மைச் செயலர் ஏ.எம். நடராஜன்  முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

கடந்த 2020-21 ம் கல்வியாண்டில் மட்டும் புதிய பணி வாய்ப்பு பெற்ற 424 பொறியியல் பட்டதாரிகளை பாராட்டும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கே.பி.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.பி.ராமசாமி முதன்மை விருந்தினராக கலந்துக் கொண்டு கே.பி.ஆர் தொழில் முன்னேற்ற மையத்தின் இயக்குனர் தாமரைக் கண்ணன் மற்றும் அவரது குழுவினரை பாராட்டி நினைவு பரிசுகள் வழங்கி ஊக்கப்படுத்தினார்.

அறுபதுக்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு நிரந்தரப்பணி ஆணைகள் பெற்ற 424 பேருக்கும் பணி நியமனங்கள் வழங்கப்பட்டன.