இந்துஸ்தான் கல்லூரியில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு

கோவை இந்துஸ்தான் கலை கல்லூரியில் 100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மாணவர்கள் இன்று (16.03.2021) விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இந்த பேரணியில் மாணவர்கள் வாக்குப்பதிவின் முக்கியத்துவம் மற்றும் அவசியம் குறித்து  பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பதாகைகளையும் துண்டு பிரசுரங்களையும் பொது மக்களிடையே வழங்கினர். இவ்விழிப்புணர்வு பேரணி கல்லூரி வளாகத்தில் துவங்கி உடையும் பாளையம், மீனா எஸ்டேட் சென்று மீண்டும் கல்லூரி வளாகத்தில் முடிவடைந்தது .

இதைத் தொடர்ந்து பேரணியின் இறுதியில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி மாணவர்கள் உறுதி மொழி எடுத்தனர்

இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன்,செயலர் பிரியா சதிஷ் பிரபு, முதல்வர் பொன்னுசாமி ஆகியோர் இதில்  கலந்து கொண்டனர்.