‘ஆசான் வள்ளுவர் விருது’ வென்ற இந்துஸ்தான் பேராசிரியர்

தமிழர் திருநாள் மற்றும் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சேலம் நிறைகோல் தமிழ்ப்பேரவை, ஓசூர் தாய் உள்ளம் உலக சாதனையாளர் புத்தகம் மற்றும் தஞ்சாவூர், ஓசூர் ரீச் மீடியா இணைந்து நடத்திய தமிழ்த் திருநாள் நிகழ்ச்சியில் ஆசிரியர் பெருமக்களைப் பெருமைப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் அவர்களின் கல்விப் பணியைப் பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. இதில் கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் பா.பிரபு எம்.ஏ.எம்ஃபில். அவர்களுக்கு சிறந்த ஆசிரியருக்கான ‘ஆசான் வள்ளுவர் விருது’ வழங்கிப் பெருமைப்படுத்தப்பட்டது.

இப்போட்டியில் நூற்றுக்கணக்கானவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. விருது பெற்ற பேராசிரியரை இந்துஸ்தான் கல்விக் குழுமங்களின் தலைவர் கண்ணையன், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், கல்லூரி செயலர் முனைவர் பிரியா சதீஷ்பிரபு, கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, மொழித் துறைத் தலைவர் முனைவர் இரா.இரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர்.