பாரத மாதாவின் குடியரசு தினவிழா

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளை சார்பில் இந்திய தேசத்தின் 72வது குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக லட்சியத்துளி மக்கள் அமைப்பின் நிறுவனர் சமூக சேவகர் கோவை தினேஷ் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிறப்புரை ஆற்றினார். முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் சேரலாதன், ராமமூர்த்தி வாழ்த்துரை வழங்கி பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் வழங்கினார்கள். சமூக சேவகர் சக்திவேல் இனிப்புகள் வழங்கி நன்றியுரையாற்றினார்.

இவ்விழாவில் லட்சியத்துளி மக்கள் அமைப்பு நிர்வாகிகள் ரெக்ஸ், ரஞ்சித், பிரதீப், அந்தோணி, பிரகாஷ் மற்றும் பாரத மாதா நிர்வாகிகள் கௌரிசங்கர், கார்த்திக் பிரவின், பிரகாஷ் சரவணன், தினேஷ், இளங்கோ, ராஜேஷ், நிர்மல், நித்தியானந்தன், கமலக்கண்ணன், சக்திவேல் மணி, தமிழ், சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். குடியரசு தினவிழாவின் சிறப்பாக செளரிபாளையம் செஷயர் மனவளர்ச்சி குன்றியோர்  இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு மதிய அறுசுவை உணவு வழங்கப்பட்டது.