களத்தில் அமைச்சர் வேலுமணி

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று (26.11.2020) பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு 172 ல் உள்ள ஏ.எம்.எம் பள்ளியில் உள்ள மாநகராட்சி நிவாரன முகாமை பார்வையிட்டு, தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உணவு, உடை போன்ற தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.

பின்னர், ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நிவர் புயல் மீட்பு பணிகள் தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன், துணை ஆணையாளர் (வருவாய் (ம) நிதி) மேகநாதரெட்டி, வட்டார துணை ஆணையாளர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், மண்டல கண்காணிப்பு அலுவலர் நிர்மல்ராஜ், மண்டல அலுவலர் சீனிவாசன் உட்பட அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.