குடியரசு தின அணிவகுப்பிற்கான இறுதிச்சுற்றுக்கு ராமகிருஷ்ணா கல்லூரி மாணவன் தேர்வு

 

ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 26 ஆம் நாள் புதுடெல்லியில் குடியரசு தலைவர் முன்னிலையில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிற்கான மாணவர்களின் தோ்வு பாரதியார் பல்கலைக்கழக அளவில் நடைபெற்றது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர் பி.பிரவின் குமார் திருச்சி மாநில கல்லூரி யில் நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக் தேர்வாகியுள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாக குடியரசு தின விழா அணிவகுப்பில் இக் கல்லூரியைச் சார்ந்த மாணவா் பங்கேற்றுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இறுதிச்சுற்றுக்கு தேர்வாகியுள்ள மாணவனுக்கு கல்லூரி நிர்வாகமும் கல்லூரி முதல்வர், செயலர் பி.எல்.சிவக்குமார் தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். மேலும், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பேராசியர்களான பிரகதீஸ்வரன், சுபாஷினி, நாகராஜன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.