மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இன்று (13.10.2020) சர்வதேச பேரிடர் இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் மூலம் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளப்படும், மீட்பு பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன் பார்வையிட்டார். இதில் வருவாய் கோட்டாட்சியர்கள் தனலிங்கம், சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முத்துராமலிங்கம், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர் ஜெகதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.