கோவையில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்

மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பல்வேறு பிரிவினர் சார்பாக கோவில்களில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி தலைவரும், மேலவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. இன்று (9.10.2020) அவரது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் டாஸ்மாக் தொழிற்சங்கம், மாநகர் மாவட்டம் மற்றும் மகளிர் அணியினர் உட்பட பல்வேறு பிரிவினர் சார்பாக மருத்துவர் அன்புமணி ராமதாஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பாட்டாளி டாஸ்மாக் தொழிற்சங்க மாநில துணை செயலாளர் வேலுமணி, மாநகர் மாவட்ட தலைவர் குமார் மற்றும் பாட்டாளி தொழிற்சங்க பேரவையின் மாநில துணை பொது செயலாளர் ராமசுந்தரம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற விழாவில் புலியகுளம் விநாயகர் கோவிலில் சிறப்பு அர்ச்சனைகள் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகளுக்கு மருத்துவர் ராமதாஸ் எழுதிய சுக்கா மிளகா சமூகநீதி எனும் புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டு, அனைவருக்கும் இனிப்புகளும் வழங்கப்பட்டது. கொரோனா கால ஊரடங்கு அரசு விதி முறைகளுடன் நடைபெற்ற இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பார்த்தசாரதி, சுப்ரமணி, சோபியா, முகம்மது அலி, முருகேஷ், ஜனார்த்தனன் கோவிந்த், ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.