கம்ப்யூட்டர் உபகரணங்கள் விற்பனை செய்யும் ஐ.டி. இன்ஃபோ சிஸ்டம் துவக்க விழா

கோவை டாடா பாத் ஏழாவது வீதி ,பாரத் எலக்ட்ரானிக்ஸ் அருகில் ஐ.டி.இன்ஃபோ சிஸ்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த விழா அதன் உரிமையாளர் ஷெரீன் தலைமையில் நடைபெற்றது. குடும்ப விழாவாக நடைபெற்ற இதில் சிறப்பு விருந்தினர்களாக அவரது உறவினர்கள் விஜயன், சுரேஷ், தினேஷ் மற்றும் குடும்பத்தினர்கள் கலந்து கொண்டனர். இந்த மையத்தை மூத்த குடும்ப உறுப்பினரான சரோஜினி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த மையத்தில் கம்ப்யூட்டர் மற்றும் அதன் உபகரணங்கள் அனைத்து பிராண்ட் வகையிலான பழைய புதிய லேப்டாப்கள் விற்பனைக்கு உள்ளதாகவும், குறிப்பாக தற்போது கொரோனா கால ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கென கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்புகள் வாடகைக்கு விட உள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.