கோவை அவிநாசி சாலையில் உள்ள காந்தி கதர் அங்காடியில் மகாத்மா காந்தியின் 152 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, கதர் அங்காடியின் காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், கோவை மாவட்ட ஆட்சியர், கு ராசாமணி மற்றும் காதி கதர் அங்காடி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.