கோவையில் செஃப் தாமுவின் “கிராமத்து விருந்து”

கோவை கிஸ்கால் கிராண்ட்ஸ் ஹோட்டல் சார்பாக செஃப் தாமுவே நேரடியாக சமைத்து வழங்க இருக்கும் “கிராமத்து விருந்து” தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சி கிஸ்கால் கிராண்ட்ஸ் ஹோட்டலில் கிராமிய கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது: நாளை முதல் தொடர்ந்து  பத்து நாட்கள் நடக்கும் இந்நிகழ்ச்சியில் சைவம் மற்றும் அசைவம் இரண்டுமே முழுக்க முழுக்க கிராமத்து சாயலில்தான்  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தினமும் மதியம், இரவு என இரு வேளைகளில் நடைபெறும் இந்த விருந்தில் செஃப் தாமு கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் மிகப்பிரியமான சமையற் கலைஞரான செஃப் தாமு தேடி தேடி சேகரித்த கிராமத்து சமையல் கிஸ்கால் கிராண்ட்ஸ் ஹோட்டலில் வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில், கிஸ்கால் குழுமத்தின் தலைவர் டி.எஸ்.பி.கண்ணப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.