நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கி பிரதமர் மோடியின் பிறந்த நாள் கொண்டாட்டம்

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு சார்பாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எழுபது நோயாளிகளுக்கு பழங்கள் வழங்கப்பட்டது.

பாரத பிரதமர் மோடியின் 70 வது பிறந்த தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழக பா.ஜ.க.வினரும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் கோவையில் பா.ஜ.க. பொருளாதார பிரிவு சார்பாக அதன் தலைவர் சரவணன் தலைமையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் வழங்கப்பட்டது. இதில் கோவை மாநகர் மாவட்ட பா.ஜ.க.தலைவர் ஆர்.நந்தகுமார் கலந்து கொண்டு எழுபது நோயாளிகளுக்கு பழங்கள் மற்றும் பிஸ்கட்டுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பொருளாதார பிரிவின் பிராபரி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் தன்ராஜ், தர்மபிரபு, சிவகுமார், கே.கே.குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.