16.95 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி : துவக்கி வைத்த அமைச்சர்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம், பாரதி நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.7.40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பயணிகள் நிழற்கூடத்தை சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மற்றும் TURIF திட்டத்திலிருந்து ரூ.16.95 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜையினை துவக்கி வைத்தார்கள். உடன் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சி துணை ஆணையாளர் மதுராந்தகி உள்ளார்கள்.