கோவையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு சரக்கு ரயில்

கோவை வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லிக்கு 16 பெட்டிகளுடன் சரக்கு ரயில் இன்று புறப்பட்டு சென்றது.

வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து டெல்லி பட்டேல் நகருக்கு இன்று முதல் சிறப்பு சரக்கு ரயில் இயக்கப்பட்டது. காலை 10 மணிக்கு இந்த ரயில் டெல்லிக்கு புறப்பட்டு சென்றது. வடகோவை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, நாகபுரி வழியாக திங்கட்கிழமை இரவு டெல்லி பட்டேல் நகரை சென்றடையும். அங்கு இருந்து புதன்கிழமை காலை 6 மணிக்கு புறப்பட்டு வடகோவை ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை வந்து சேரும்.