ஸ்ரீ ராமகிருஷ்ணா கலைக் கல்லூரிகளின் இளங்கலை முதலாம் ஆண்டு தொடக்க விழா

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மற்றும் நவ-இந்தியா பகுதியில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காணொளி மூலம்  இளங்கலை படிப்புகளுக்கான  முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்திய தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டி. லக்ஷ்மிநாராயணஸ்வாமி உரையாற்றினார். இவர் பேசுகையில், வெற்றியினை நிர்ணயிக்க கல்லூரியை சரியாக பயன்படுத்துங்கள். நல்ல நட்பு வட்டத்தினை ஏற்படுத்தி, குறிக்கோளினை நிர்ணயித்து, விடாமுயற்சியிடன் கடினமாக உழைத்தால் இலக்கினை அடையமுடியும் எனக் கூறினார்.

மேலும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி நடத்திய முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சளார் பாரதி பாஸ்கர் கலந்துகொண்டு  பேசியபோது, இன்றைய காலத்தில் இளம் பருவத்தினருக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. கிடைக்கும் வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் முன்னேற முடியும். ஆசிரியர்களின் நல்ல அறிவுரைகளை சரியாக பயன்படுத்தினால் வாழ்வில் நினைக்கும் குறிக்கோளை அடையமுடியும் எனக் கூறினார்.

இக்காணொளி விழாவில் இக்கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி சி.வி.ராம்குமார், முதல்வர்கள் பி.எல்.சிவகுமார், கே. சித்ரா, பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.