கொரோனா காலத்தில் சிறப்பாக சேவை புரிந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அமைச்சர் விருது

 

கோவை : சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை சார்பில் கொரோனா பேரிடர் காலத்தில் சிறப்பாக சேவை புரிந்ததற்காக அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டி சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விருதுகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, துறை இயக்குநர் டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி, துறை கூடுதல் இயக்குநர்கள் ஆர்.மனோகர்சிங், ஜி.லட்சுமிபிதி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.