கோவை மக்கள் சேவை மையத்தின் தேசிய கைத்தறி தினக் கொண்டாட்டம்

கோவை மக்கள் சேவை மையத்தின் சார்பில் தேசிய கைத்தறி தின நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை மக்கள் சேவை மைய தலைவர் வானதி சீனிவாசன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி பேராசிரியர் சுஜரிதாவும், நடுவராக ட்ரீம்ஃசோன் ஜான் பீட்டர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆன்லைன் வாயிலாக நடைபெற்ற தேர்வுகளின் இறுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இந்த இறுதிச்சுற்றில் கோவையை சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.