எஸ்.எஸ்.வி.எம். பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 தேர்வில் சாதனை

கோவை சிங்காநல்லூரில் எஸ்.எஸ்.வி.எம் பள்ளியின் சி.பி.எஸ்.இ பிளஸ்-2 தேர்வு எழுதிய 135 மாணவ மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 100 சதவீத தேர்ச்சி ஆகும்.

பள்ளி அளவில் அழகுமீனா 500 க்கு 485 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், வீணாலஹரி வெங்கடேஷ், காருண்யா தேவி ஆகியோர் 483 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், அபிநயா அலெக்சாண்டர், மகேஷ், சுபஸ்ரீ ஜெயக்குமார் ஆகியோர் 482 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர். இதே போல் 10ஆம் வகுப்பு தேர்வில் 112 மாணவ மாணவிகள் தேர்வு எழுதியதில் அனைவரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 100சதவீத தேர்ச்சி ஆகும். பள்ளி அளவில் மாணவி ஹசிகாராம்ஸ்ரீ பாஸ்கரன் 500 க்கு 491 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், சம்ஹிதர், வேணுஸ்கந்தா ஆகியோர் 482 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும் பாலகிருஷ்ணன், வருணிகா ஆகியோர் 481 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

தேர்வில் சாதனை படைத்த மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளரும் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மணிமேகலை மோகன், செயலர் மோகன்தாஸ், பள்ளி முதல்வர் நிமிதா பிரமோத் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.