ஏழை முதியவருக்கு செயற்கை கால்கள் வழங்கிய நல்லறம் அறக்கட்டளை

கோவையில் விபத்து ஒன்றில் கால்களை இழந்தவருக்கு நல்லறம் அறக்கட்டளை சார்பில் செயற்கை கால்கள் வழங்கப்பட்டது. கோவை குளத்துப்பாளையம் தொட்டராயன் கோவில் பகுதியில் நாகராஜன், பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தொட்டராயன் கோவில் பகுதியில் சாலையை கடக்க முயன்றபோது விபத்தில் சிக்கிய நாகராஜன் அவரது வலது காலை இழந்தார்.

தொடர்ந்து வீல் சேர் உதவியுடன் வாழ்ந்து வந்த அவருக்கு நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் செயற்கை கால்களை வழங்கி உதவியுள்ளார்.