கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகள் ஆய்வு

கோவை மாநகராட்சி நெல்லித்துறையில் தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலமாக நிறைவேற்றப்படும் கவுண்டபாளையம் வடவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மேம்பாட்டுப் பணிகளையும், செல்லபனுர் பகுதியிலுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீரேற்று நிலையத்தினை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத், கோவை சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் நிர்வாக பொறியாளர் சரவணக்குமார், 24×7 குடிநீர் திட்ட ஆலோசகர் கோபாலகிருஷ்ணன் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் உடனுள்ளனர்.