கோவையில் நாளை மாலை 5 மணி முதல் ஊரடங்கு

கோவை மாவட்டத்தில்,நாளை மாலை 5 மணி முதல் வரும் திங்கள் காலை 6 மணி வரை எந்தவிதமான தளர்வுகள் இன்றி கோவை மாவட்டத்தில் முழு ஊரடங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை மற்றும் அறிவுரைகளின்படி, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியில் மக்கள் நல்வாழ்வுத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனா;.

தற்போது, கொரானா வைரஸ் தொற்று காரணமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சா; அவா;கள் தமிழகம் முழுவதும் ஜூலை 31 வரை தேவையான தளர்வுகளுடன் ஊரடங்கினை அறிவித்திருந்தார். அத்துடன் ஜூலை 05, ஜூலை 12, ஜூலை 19 மற்றும் ஜூலை 26 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி தமிழ்நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், கோவையிலும் முழுமையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில்,  நாளை (25.07.2020) மாலை 5 மணி முதல் திங்கள் கிழமை (27.07.2020) காலை 6 மணி வரை எவ்வித தளர்வுகளின்றி முழு ஊரடங்கு அமுல்படுத்தப்படுகிறது

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகள், பால் மற்றும் மின்சாரம் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும். வேறு எந்த நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படாது.

ஊரடங்கினை மீறும் வகையில் தேவையின்றி வெளியில் நடமாடுவோர் மீது காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தொற்றினை கட்டுபடுத்தும், வருவாய் துறை, மக்கள் நல்வாழ்வுத் துறை, காவல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பணியில் இருப்பார்கள்.

உழவர் சந்தைகள், மார்க்கெட், மளிகைக்கடைகள், மீன் மார்க்கெட், பூ மார்க்கெட், இறைச்சிக் கடைகள், டாஸ்மாக் கடைகள், வர்த்தக தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட எவ்வித அமைப்புகளும் இயங்காது.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு எளிதாகவும், விரைவாகவும் பரவும் தன்மையுள்ள நோய் என்பதால், இதை முழுமையாக கட்டுப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், வணிகர்கள், தொழில்நிறுவனங்கள், வர்த்தக அமைப்புகள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைவரும் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ராசாமணி தெரிவித்துள்ளார்.