நள்ளிரவில் கோவில்கள் முன்பு தீவைப்பு !

நள்ளிரவில் கோவில்கள் முன்பு மீது தீவைப்பு உள்ளிட்ட தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றதால் கோவையில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை நல்லாம்பாளையத்தில் நள்ளிரவில் சென்ற மர்ம நபர்கள் அங்கு உள்ள செல்வ விநாயகர் கோவில் சிலைகள் முன்பு தீ வைத்து எரித்துள்ளனர். மேலும், கோவில் உடைமைகளுக்கும் தீவைத்துள்ளனர். இதேபோல், கோவை ரயில் நிலையம் முன்பு உள்ள விநாயகர் கோவில் மற்றும் டவுன்ஹால் பகுதியில் உள்ள மாகாளியம்மன் கோவில் முன்பு மர்ம நபர்கள் டயரில் தீ பற்ற வைத்து வீசிச் சென்றுள்ளனர். மேலும், கோவை டவுன்ஹாலை அடுத்த ஐந்து முக்கு சாலையில் உள்ள மாகாளியம்மன் கோவில் வாசலிலும் மர்ம நபர்கள் தீ வைத்துச் சென்றனர். கோவையில் நள்ளிரவில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், முக்கிய கோவில்களுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.