ஸ்மார்ட் சிட்டி பணிகளை ஆய்வு செய்தார் மாநகராட்சி ஆணையாளர்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் மாதிரி சாலை அமைக்கும் பணிகள், 24×7 குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் பல அடுக்குகள் கொண்ட வாகனநிறுத்துமிடம் பணிகள் நடைபெற்று வருவதை மாநகராட்சி ஆணையாளர் ஷ்ரவன்குமார் ஜடாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மாநகரப் பொறியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடனிருந்தனர்.