வந்தே பாரத் திட்டத்திற்கு கூடுதலாக 870 விமானங்கள் இயக்க அனுமதி

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் இருந்து இந்தியர்களை அழைத்து வருவதற்காக இயக்கப்படும் 432 விமானங்கள் மட்டுமின்றி மேலும் கூடுதலாக 870 விமானங்களை இயக்க விமானப் போக்குவரத்து இயக்குனரகம் அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்து நாடு திரும்ப முடியாமல் தவிப்பவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கவும் அங்குள்ள இந்தியர்கள் தாய்நாடு திரும்ப விரும்பினால் அவர்களை அழைத்து வரவும் மனிதாபிமான அடிப்படையில் பல்வேறு நாடுகளின் விமானங்கள் இயக்கப்படுகின்றன.

புதிதாக 870 விமானங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 2 லட்சம் பயணிகள் பலன்பெறுவார்கள் .