கிரிக்கெட் போட்டியினை துவக்கி வைத்த அன்பரசன்

கோவை பி.கே.புதூர் பகுதியில், நரசை நண்பர்கள் மற்றும் ராக் ஸ்டார் கிரிக்கெட் கிளப் இணைந்து 32 அணிகள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் போட்டியினை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் துவக்கிவைத்தார்.

பி.கே.புதூர் பகுதியில், நரசை நண்பர்கள் மற்றும் ராக் ஸ்டார் கிரிக்கெட் கிளப் இனைந்து 32 அணிகள் பங்கேற்று விளையாடும் கிரிக்கெட் போட்டிகளை நடத்திவருகின்றனர். இந்த விளையாட்டு போட்டிகளை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நடவுசெய்தார். பின்னர் அவருக்கு அணித்தலைவர்களை அறிமுகம் செய்துவைத்தனர்.

முதல் பந்தை எதிர்கொண்டு விளையாடி கிரிக்கெட் போட்டிகளை துவக்கிவைத்தார். இந்த போட்டியில் வெற்றி பெரும் அணிக்கு முதல் பரிசாக சுழற்கோப்பையும் ரூ. 10 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்படுகிறது. இரண்டாம் பரிசாக சுழற்கேடயம் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் வழங்கப்படுகிறது. மேலும் கலந்துகொள்ளும் அனைத்து வீரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்குப்படும். இந்த விழாவில் 92 வது வார்டு அதிமுக செயலாளர் சித்திரை செல்வராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டார்கள்.